மெக்சிகோவில் கனமழை: பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

மக்கள் வசிக்கும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.நிலச்சரிவில் வீடுகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதமடைந்தன.
மெக்சிகோவில் கனமழை: பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு
Published on

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதம் அடைந்தன.

பல்வேறு மாநிலங்களில் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், மெக்சிகோவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com