கென்யா: சாலை விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து.. கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி

28 இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
கென்யா: சாலை விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து.. கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி
Published on

கென்யாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் கத்தாரில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தனர்.

கத்தாரில் இருந்து கென்யாவுக்கு சுற்றுலா சென்ற 28 இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

20 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேரின் நிலை கலவைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com