ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் உயிரிழப்பு

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்க பட்டு வருகிறது.இதில் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் என 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் உயிரிழப்பு
Published on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிசம்பர் 14 அன்று 2 நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

யூத பண்டிகையின்போது நடந்த இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கபட்டு வரும் நிலையில் இன்று மதியம் மீண்டும் துப்பாக்கிசூடு நடந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்கெல்லிகோ என்ற நகரில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த சிறிய நகரில் மொத்தமே 1500 பேர் மட்டுமே வசிக்கின்றனர். 

இதில் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் என 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உயிரிழந்த 2 பெண்களில் ஒருவரின் முன்னாள் காதலன் என்றும் இது தனிப்பட்ட பகையால் நடந்தது என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com