உக்ரைனுக்கு எதிராக போர்: ரஷியாவுக்கு கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷியா முன்வரவில்லை.பொருளாதார தடைவிதித்து ரஷியாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்க திட்டம்.
உக்ரைனுக்கு எதிராக போர்: ரஷியாவுக்கு கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
Published on

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பலமுறை பொருளாதார தடைவிதித்த நிலையிலும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் ரஷியா போர் நிறுத்தம் செய்ய முன்வரவில்லை.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். கடுமையான பொருளாதார தடைவிதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஷியாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்த கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு, நார்ட் ஸ்ட்ரீம் கியாஸ் பைப்லைன்ஸ் மாற்றம் தடை, நிழல் கடற்படை கப்பல்களை குறிவைப்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பா உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கியது. இந்த தகவல் மிகவும் தெளிவானது. ரஷியா போரை முடிக்கும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com