இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: ஐரோப்பிய ஆணைய தலைவர்

உலகப் பொருளாதார மன்ற கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.இதில் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: ஐரோப்பிய ஆணைய தலைவர்
Published on

டாவோஸ்:

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் பேசியதாவது:

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம்.

சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என அழைக்கிறார்கள். இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்குச் சமம்.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தும்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது, இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com