வங்கதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை..!

மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவ வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிழைலயில், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு போடப்பட்டது.
வங்கதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை..!
Published on

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வன்முறையில் ஈடுபட்டனர். அவரது மாளிகையை முற்றுகையிட்டனர்.

இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா திரும்பிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com