உறுப்பு தானத்தின் உச்சகட்ட வெற்றி: இறந்த பெண்ணின் கருப்பையில் உருவான புதிய உயிர்

லண்டனை சேர்ந்த பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
உறுப்பு தானத்தின் உச்சகட்ட வெற்றி: இறந்த பெண்ணின் கருப்பையில் உருவான புதிய உயிர்
Published on

இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 34 வயது பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.

இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண் ஒருவரின் கருப்பை, கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

கருப்பை பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே கருத்தரித்த அந்த பெண், தற்போது எவ்வித பாதிப்புமின்றி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். "இறந்த பின்பும் ஒரு பெண்ணால் இன்னொருவருக்கு தாய்மையைத் தர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என டாக்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com