5 வருடங்கள் கழித்தும் நான்தான் சி.இ.ஓ.. டெஸ்லா பற்றிய கேள்விக்கு எலான் மஸ்க் பளிச் பதில்

ப்ளூம்பெர்க் அமைப்பு கத்தார் பொருளாதார மாநாடு நடத்துகிறது. கடந்த சில மாதங்களாக டெஸ்லா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
5 வருடங்கள் கழித்தும் நான்தான் சி.இ.ஓ.. டெஸ்லா பற்றிய கேள்விக்கு எலான் மஸ்க் பளிச் பதில்
Published on

ப்ளூம்பெர்க் அமைப்பு இன்று ஏற்பாடு செய்த 'கத்தார் பொருளாதார மாநாட்டில் ' அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் காணொளி வாயிலாக பங்கேற்றார்.

இதன் போது, ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மஸ்க்கிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் எதிர்காலம் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மஸ்க், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீடிக்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த சில மாதங்களாக டெஸ்லா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதிபர் டோனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் மஸ்க் ஆதிக்கம் செலுத்துவதே இதற்கு காரணம்.

அமெரிக்க அரசாங்கத்தில் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் குழுவில் மஸ்க் உள்ளார். இந்த துறையால் அமெரிக்க அரசில் பலரின் வேலை பறிபோனது. இதற்கு எதிராக பல டெஸ்லா ஷோரூம்களுக்கு வெளியே போராட்டங்களும் டெஸ்லா கார்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com