சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ் தேவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர்.தற்போது வெள்ளிக்கிழமை தொழுகையை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் உயிரிழப்பு
Published on

சிரியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஏராளமானோர் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்தனர்.

சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலவைட் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிரியாவில் இஸ்லாமிஸ்ட் அதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடந்த 2வது பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இமாம் அலி பின் அபி தலிப் மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் உள்நாட்டுப் போரின்போது, ஹோம்ஸ் நகரம் கடுமையான மதவாத வன்முறையை எதிர்கொண்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com