அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஈரான் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயிரைப் பறித்தது.தூதரக கட்டிடத்தை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் அலுவலகத்தை சூரையாடினர்.
அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஈரான் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு
Published on

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் தாக்கியதில் மூன்று அமெரிக்க தூதரக ஊழியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயிரைப் பறித்தது.

கமேனி உயிரிழந்தது போராட்டக்காரர்களை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) காலை முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் முழுவதும் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஈரானின் அரசு ஊடகங்கள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதை இன்று அதிகாலை வாக்கில் உறுதிப்படுத்தின.

இந்த நிலையில், கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நூற்றுக்கும் அதிக போராட்டக்காரர்கள் சூரையாடினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அமெரிக்க தூதரக கட்டிடத்தை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் அலுவலகத்தை சூரையாடினர்.

இதையடுத்து, தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க ராணுவத்தினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கராச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com