தென் ஆப்பிரிக்காவில் கனமழை: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

பலத்த மழை காரணமாக போக்குவரத்து, மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கனமழை: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு
Published on

கேப் டவுன்:

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தின் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் முடங்கி உள்ளன என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com