எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக 20 மாகாணங்கள் வழக்கு

கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும்.
எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக 20 மாகாணங்கள் வழக்கு
Published on

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர். இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.90 லட்சம்) உயர்த்தியது. இந்த கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் தலைமையிலான 20 மாகாணங்களின் கூட்ட மைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

அதில் எச்-1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, டிரம்பின் சட்டவிரோதமான புதிய எச்-1பி விசா கட்ட ணம் உயர்வு என்பது ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவி லியர்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் பணி யாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.

இது கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com