திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை காதலிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய காதலன்

மூன்று பேரை காதலித்து வந்த நிலையில், முதல் காதலி திருமணம் செய்ய வற்புறுத்தல்.தன்னைவிட வயது அதிகம் என்பதால் வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கொலை செய்துள்ளார்.
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை காதலிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய காதலன்
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விநாயகர் தெருவை சேர்ந்தவர் லோகநாயகி (31). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுவர்ணபுரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை.

இதையடுத்து அவரது தோழிகள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாயமான இளம்பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி வந்த தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

காணாமல் போன லோகநாயகி ஒரு வாலிபரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் லோகநாயகி தன்னிடம் கடைசியாக ஏற்காட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். மற்றப்படி எனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் லோகநாயகி குறித்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து அப்துல் ஹபீஸ் என்ற அந்த வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ள லோகநாயகியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார்.

லோகநாயகி என்பவரை அப்துல் ஹபீஸ் காதலித்து வந்ததுள்ளார். அதேவேளையிலா் அப்தல் ஹபீஸ் மேலும் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.

லோகநாயகி தன்னை திருமணம் செய்து கொள்ள அப்துல் ஹபீஸை வற்புறுத்தியுள்ளார். லோகநாயகிக்கு தன்னை விட வயது அதிகம் என்பதால் அப்துல் ஹபீஸ் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. லோகநாயகி தொடரந்து வற்புறுத்தியதால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது இரண்டு காதலிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் உதவியுடன் விஷ ஊசி செலுத்தில் லோகநாயகியை கொலை செய்த அப்துல் ஹபீஸ், உடலை ஏற்காடு மலைப்பகுதியில் கொண்டு சென்று வீசியுள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் அழுகிய நிலையில் லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது இரண்டு காதலிகள் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்காட்டு மலைப்பாதையில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு உள்ளூர்வாசிகள் தகுந்த சோதனைக்குப் பின்னர் உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com