

பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது.
2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
2025ல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி. டெல்லி போல 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்.
திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மயமாகிவிட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் பணத்தை திமுக அரசு மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது.
முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது.
தமிழ், தமிழ் எனக்கூறும் திமுக அரசு உயர்கல்வியை தமிழ் வழியில் கொண்டு சேர்க்காதது ஏன்?
தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?
திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
#WATCH | Madurai, Tamil Nadu | Union Home Minister Amit Shah says, "In 2025, we formed the government in Delhi, in 2026, the BJP-NDA will form the government in West Bengal and Tamil Nadu..." pic.twitter.com/P1WQUd7Mh3