குடும்ப தகராறு: கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உட்பட 3 பேர் படுகாயம்

தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
குடும்ப தகராறு: கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உட்பட 3 பேர் படுகாயம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை தான் வைத்திருந்த ஏர்கன் (துப்பாக்கி) கொண்டு சுட்டார்.

இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விசாரணையில், தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தென்னரசு போதைக்கு அடிமையாக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தென்னரசு, தனது தாய், மனைவி சித்தப்பாவின் மகன் ஆகியோரை சுட்டது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தென்னரசுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com