துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் வருகை- சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் வருகை- சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் நாளை வருகை தருகின்றனர்.

இதை முன்னிட்டு சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியத் துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com