பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயிலுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி இன்று 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயிலுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
Published on

பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

அதன்படி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தேபாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்தநிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோவை வந்த வந்தேபாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com