பரந்தூர் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வரும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி அறிவித்த பிறகு, விஜய் முதல்முறையாக களத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com