விஜய் தனித்துதான் காணப்படுகிறார்: வடிவேலு ஷோ நடத்தினால் கூட கூட்டம் கூடும்: திருமாவளவன்

தற்போது வரை விஜய் தலைமையில் கூட்டணி என்பது அமையவில்லை. திமுக கூட்டணியை வீழ்த்தும் அறவிற்கு விஜய் பலம் பெறவில்லை.
விஜய் தனித்துதான் காணப்படுகிறார்: வடிவேலு ஷோ நடத்தினால் கூட கூட்டம் கூடும்: திருமாவளவன்
Published on

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று திருச்சி மரக்கடையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பிரசார வேன் மூலம் மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார்.

ஆனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால், மதியம் 10.30 மணிக்கு பிரசார வேன் வர வேண்டிய நிலையில், இன்னும் வந்து சேரவில்லை. தொண்டர்கள் வெள்ளத்தில் தத்தளித்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், விஜயின் பிரசாரம் மற்றும் தொண்டர்களின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு திருமாவளவன் பதில் அளிக்கையில் "தற்போது வரை விஜய் தலைமையில் கூட்டணி என்பது அமையவில்லை. தனித்துதான் காணப்படுகிறார். திமுக கூட்டணியை வீழ்த்தும் அறவிற்கு விஜய் பலம் பெறவில்லை. வடிவேலு ஷோ நடத்தினால் கூட கூட்டம் கூடும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com