2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: தவெக தலைவர் விஜய் இன்று வழங்குகிறார்

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார்.
2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: தவெக தலைவர் விஜய் இன்று வழங்குகிறார்
Published on

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

இந்த நிலையில், த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.

இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

இதற்காக ஓட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார். மேலும் 2026 தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டப்போகிறார்கள் என விஜய் விமர்சித்து இருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com