ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கிராமச் சாலைகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க  ரூ.505 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் கிராமச் சாலைகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக அனைத்து பருவ காலங்களிலும் சென்றடைவதற்காக கிராமச் சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

2025-26-ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டத்தில் ரூ.505.56 கோடி செலவில் 100 பாலங்கள் கட்டுவதற்கு பாலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com