பா.ம.க.வுடன் எப்போதும் கூட்டணி வைக்கமாட்டோம்- திருமாவளவன்

அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம்.
பா.ம.க.வுடன் எப்போதும் கூட்டணி வைக்கமாட்டோம்- திருமாவளவன்
Published on

கே.கே. நகர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

ஆனால் நிரந்தர தீர்வு தேவை. சுமூகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். 2 நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவை பேண வேண்டும்.

போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லி வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது. அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பா.ஜ.க. செயல்படுகிறது.

பாகிஸ்தானை, இந்தியாவோடு சேர்ப்பது, ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்ற இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம். காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.

எப்போதும் பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com