'திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்' - சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்.கலை நிகழ்ச்சிகள் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும்
'திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்' - சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை' முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று (ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், மேயர் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

"சென்னை சங்கமம் என்பது தமிழ் சங்கமமாக, ஒட்டுமொத்த கலைஞர்களின் சங்கமமாக, வெற்றி சங்கமமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் கலை, பண்பாட்டு துறை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. கலைஞர்கள் தங்கள் திறமைகளை மிக எழுச்சியுடன் பறைசாற்றியுள்ளனர். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட். வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரிய இருக்கிறது; புரியும். அதற்காக நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்." என தெரிவித்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் ஜன.15-18 வரை 20 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை நடைபெற உள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com