தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்- ஜெயக்குமார்

தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தியுள்ளார்.கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்- ஜெயக்குமார்
Published on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்நிலையில், தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை.

கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com