தமிழ்நாடு பாஜக-வுக்கான மண் இல்லை..!- செல்வப்பெருந்தகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பாஜக-வுக்கான மண் இல்லை..!- செல்வப்பெருந்தகை
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு பாஜக-க்கான மண் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com