பெண்ணுரிமையில் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே முன்னோடி.!- உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
பெண்ணுரிமையில் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே முன்னோடி.!- உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர்," தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றன், விளையாட்டிலும் சாதிக்கின்றனர்" என்றார்.

இதுகுறித்து மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்," இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, ஆனால் தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது. பெண்ணுரிமையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.

திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று இந்திய ஒன்றியமே சொல்கிறது.

உத்தியோகம் புருஷனுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் அழகு என மாற்றிக் காட்டியுள்ளது நம் அரசு" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com