சென்னையில் திடீர் மழை

சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் திடீர் மழை
Published on

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், பாரிமுனையில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மேக மூட்டமாக காணப்படுகிறது.

சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com