

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெற்றோரின் வசதிக்காக காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய QR CODE வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு தகவல் தெரியவந்த நிலையில் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
QR CODE மூலம் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், தனது எக்ஸ் தள பக்கத்தில், "சூப்பர்" என பாராட்டு தெரிவித்துள்ளார்.
Super ??? pic.twitter.com/I41NiVLl3T