

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.