குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை - கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

சிறப்பு ரெயில் இரவு 10.40க்கு கிளம்பும் ரெயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு குமரி வந்தடையும்.மறுமார்க்கமாக ஞாயிறன்று (ஜன.26) இரவு 8.30க்கு கிளம்பி காலை 8.30க்கு தாம்பரம் வந்தடைகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை - கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 24 அன்று சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவேக ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சிறப்பு ரெயில் இரவு 10.40க்கு கிளம்பும் ரெயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு குமரி வந்தடையும்.

மறுமார்க்கமாக ஞாயிறன்று (ஜன.26) இரவு 8.30க்கு கிளம்பி காலை 8.30க்கு தாம்பரம் வந்தடைகிறது.

மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் திறக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com