தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணி உடைவதே சிலரின் விருப்பம் - திருமாவளவன்

6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.
தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணி உடைவதே சிலரின் விருப்பம் - திருமாவளவன்
Published on

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனால் தூய்மை பணியாளர்களுடன் சமரசம் ஏற்பட்டது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.

அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மீதமுள்ள 4இல் 2 மண்டலங்களை தனியார் மயமாக்கும் முடிவை தற்போதைய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியறுத்தினார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com