நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாவட்ட நிர்வாகிகள் விலகல்

2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாவட்ட நிர்வாகிகள் விலகல்
Published on

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ள நிர்வாகிகள், அதற்கான காரணம் ஏதும் கூறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com