பா.ம.க. தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் : இனி நானே தலைவர்- ராமதாஸ்

பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் : இனி நானே தலைவர்- ராமதாஸ்
Published on

சென்னை:

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com