உங்கள் மீது யாராவது கை வைத்தால்... தவெக நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேச்சு

அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம் நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது.
உங்கள் மீது யாராவது கை வைத்தால்...  தவெக நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேச்சு
Published on

சென்னை வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "உங்கள் மீது யாராவது கை வைத்தால், ஆயிரம் இல்லை ரெண்டாயிரம் தவெக தொண்டர்கள் அடுத்த 15 நிமிடங்களில் உங்களுடன் வந்து நிற்பார்கள். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம், மந்திரியா இருக்கலாம்... ஆனா நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com