

பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில், ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்க கனிமொழி தலைமையில் குழு ரஷ்யா, ஸ்பெயின் செல்ல உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
ஒத்துழைப்பு நல்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.
நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
I am honoured to represent India and lead one of the delegations at this important time.The DMK has always stood for the integrity of the nation and the values enshrined in our Constitution.I thank Thiru @mkstalin for his steadfast support, and Hon'ble PM @narendramodi,… pic.twitter.com/GZJBkdUQTR