முன்கூட்டியே செதுக்கிய முடிவு: தனக்குத்தானே கல்லறை கட்டிக்கொண்ட ஆசிரியர் காலமானார்

இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
முன்கூட்டியே செதுக்கிய முடிவு: தனக்குத்தானே கல்லறை கட்டிக்கொண்ட ஆசிரியர் காலமானார்
Published on

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (74). அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து உதவி தலைமை ஆசிரியராக உயர்வு பெற்ற இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.

சிறந்த இறகு பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு வீரர். மிதிவண்டி ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர்.

வித்தியாசமான சிந்தனை கொண்ட இவர் இவரது சொந்த கிராமமான முத்தம்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் பளிங்கு கற்களில் இவரது படத்துடன் கூடிய கல்லறையை தனக்கு தானே அமைத்துக் கொண்டார்.

அந்த கல்லறையில் முத்தம்பட்டி ஆறுமுகம் வாரியார், மனைவி மாரியம்மாளின் மகன் காசி, குருசாமி பிச்சமுத்து, உதவி தலைமை ஆசிரியர் பிறப்பு 1.7.1952, இறப்பு .... 20.. என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவரது விருப்பப்படி, இவர் தனக்குத்தானே கட்டிக் கொண்ட கல்லறையில், இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே கல்லறை அமைத்துக் கொண்டு உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழப்பாடி பகுதியில் இவரது இறப்பு பேசு பொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com