அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்- மக்களே உஷார்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்- மக்களே உஷார்
Published on

சென்னை :

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கு கடற்கரை அல்லது தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிக மழை பெய்யும்.

அதன்படி, நாளை முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (கோயம்புத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி) பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை. சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில தினங்களுக்கு 200 மிமீ (அதிக மழை) மழை பெய்யக்கூடும்.

பொதுவாக இந்த பருவமழை அதிகரிப்பு ஜூன் மாதத்தில் ஏற்படும். ஆனால் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்.

இது விடுமுறை காலம் என்பதால், குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர் - அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.

கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை பயணிக்க பாதுகாப்பானவை.

மேற்கு கடற்கரை / மலைத்தொடர்களில் பருவமழை ஆரம்பித்த உடன் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.

பெங்களூருவில் மேற்குப் பக்கத்திலிருந்து மேகங்களுடன் பருவமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com