அன்புமணிக்கு அங்கீகார கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம் - வழக்கறிஞர் பாலு தகவல்

பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
அன்புமணிக்கு அங்கீகார கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம் - வழக்கறிஞர் பாலு தகவல்
Published on

சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

* ஆக.9-ந்தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

* இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது.

* 2026 வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

* பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

* பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

* தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

* அன்புமணிதான் பா.ம.க. தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

* பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

* பா.ம.க. அன்புமணி தலைமையில் உள்ள இயக்கம் தான் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கறிஞர் பாலுவின் அறிவிப்பை தொடர்ந்து பா.ம.க.வினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பா.ம.க.வினர் கொண்டாடினர்.

ராமதாசின் நோக்கத்தை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். அனைவரும் அன்புமணி தலைமையிலான பா.ம.க.விற்கு வாருங்கள் என ராமதாஸ் அணியில் உள்ளவர்களுக்கு பாலு அழைப்பு விடுத்துள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com