2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்- அண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்- அண்ணாமலை
Published on

கோவை மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேடிவ் காலனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:-

தமிழகத்தில் 25 ஆயிரம் ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதனை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.

இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 9 நாட்களில், அங்கு போலீசாரின் அடக்குமுறை இல்லை.

இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com