மதுரை அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி

பள்ளப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.ஆம்னி பேருந்து விபத்தில் கனகரஞ்சிதம், சுதர்சன், திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

பள்ளப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மேலூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த கனகரஞ்சிதம், சுதர்சன், திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com