மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டதா?- அண்ணாமலை விளக்கம்

ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.
மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டதா?- அண்ணாமலை விளக்கம்
Published on

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தியில் கொடுத்துவிட்டு தான் இங்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். அமித்ஷா செய்தவற்றை தெரிந்து கொண்டு தான் பின்னர் துரைமுருகன் பதில் கூற வேண்டும்.

அமித்ஷாவை வரவேற்ற போஸ்டரில் சந்தான பாரதி படம் இடம்பெற்றதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.

உரிய விசாரணை மேற்கொண்டால் சர்ச்சை போஸ்டரின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக எங்கும் மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறவில்லை.

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தான் வரிசைகட்சி நின்று கையெழுத்து போட்டுச்செல்கின்றனர். 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.

ஆர்வமுடன் வரும் மாணவர்களை இங்கு வராதீர்கள் என்று எப்படி கூறுவது? 

பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com