நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு - வதந்திகளை நம்பவேண்டாம் CPI கட்சி அறிக்கை

நல்லகண்ணு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.யே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு - வதந்திகளை நம்பவேண்டாம் CPI கட்சி அறிக்கை
Published on

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனுடையே நல்லகண்ணு காலமானார் என்று இணையத்தில் நேற்று இரவு தகவல் பரவின. அந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை யாரும் எதையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com