பிறந்து 43 நாட்களே ஆன குழந்தை கொலை- தாய் கைது

இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிறந்து 43 நாட்களே ஆன குழந்தை கொலை- தாய் கைது
Published on

நீலாங்கரை:

சென்னை நீலாங்கரையில் பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

கார் ஓட்டுநர் அருண் - பாரதி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனிடையே இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால், 2-வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே வீசியதாக பாரதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com