சத்யபால் மாலிக் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

2018- 19-ம் காலகட்டத்தில் சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.சத்யபால் மாலிக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சத்யபால் மாலிக் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னரான சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார் என டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. 2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சத்யபால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். அமைதியின் ஊடாக உயர்ந்து, அதிகாரத்திற்கு உண்மையைப் பேசத் துணிந்த ஒரு மனிதர். அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் வரலாறு நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com