உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு

துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.
உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

என்னுடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டு, பிள்ளையார் சுழி போட்டதே இந்த காட்பாடி தொகுதி தான். நமது கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ள மண் இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமைமிகு மண்ணில் இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன்.

நான் துணை முதலமைச்சர் ஆன போது பொதுச்செயலாளர் என்னை வாழ்த்தினார். அது எப்படி என்றால்.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பின் வரிசையில் இருந்தேன், துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.

அப்போது, இனிமே நீ என் பக்கத்து சீட்டு தானே வா.. வா... உன்னை பார்த்துக்கொள்கிறேன் என பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னை வாழ்த்தினார் என கூறினார்.

மேலும் இதற்கு முன்பு காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-

எனது மகன் கதிர் ஆனந்திற்காக முதன் முதலில் எம்.பி தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்து பேசியதை துணை முதல்வர் உதயநிதி குறிப்பிட்டார். அது எனக்கே ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஞாபகம் வைத்து பேசுகிறார்.

"துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கருணாநிதி) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்"என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com