ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com