2026ல் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் - கே.பி.முனுசாமி

புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது.
2026ல் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் - கே.பி.முனுசாமி
Published on

மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,

தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது. 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com