பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு- உதயநிதி ஸ்டாலின்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பத்திரிகை மன்ற நிர்வாகிகள் TELESCOPE-ஐ நினைவுப் பரிசாக வழங்கினர்.
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு- உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பத்திரிகை மன்ற நிர்வாகிகள் TELESCOPE-ஐ நினைவுப் பரிசாக வழங்கினர்.

பின்னர், விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர், " பத்திரிகையோடு தொடர்பு கொண்டவன் என்ற உரிமையில் எனக்கிது பெருமை.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com