தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது?- ஆளுநர் ஆர்.என். ரவி

துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது.துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது?- ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநடு இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் செய்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. துணை வேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்திற்குள் கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா? என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com