

நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.
கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.
நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
On account of Independence Day on 15-08-2025 (Friday).Sunday Timetable will be followed tomorrow (15-08-2025).Metro Train service will operate from 05:00 hrs to 23:00 hrs with the following frequency:Peak Hours (12:00 hrs - 20:00 hrs) headway : Metro trains will be available…